செய்திகள்

உத்தரபிரதேச மந்திரிக்கு கொரோனா பாதிப்பு

உத்தரபிரதேச மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியாக இருப்பவர் உபேந்திரா திவாரி. இவர் கடந்த 2 நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவு நேற்று தெரியவந்தது.

இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

SCROLL FOR NEXT