செய்திகள்

முகக்கவசம் அத்தியாவசிய பொருளாக அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, முகக்கவசத்தை அத்தியாவசிய பொருளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பொருட்களுக்கு சில இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு முகக்கவசம், கைகழுவும் திரவம் (சானிடைசர்), கையுறைகள் ஆகியவற்றை அடுத்த 100 நாட்களுக்கு அத்தியாவசிய பொருட்களாக அறிவித்துள்ளது. அதோடு பேரிடர் மேலாண்மை விதிகளையும் அமல்படுத்தி உள்ளது.

இதன்மூலம் மாநில அரசுகள் இவைகளின் உற்பத்தி, வினியோகம், விலை ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும். இவைகளை பதுக்கவோ, கள்ளச்சந்தையில் விற்கவோ முடியாது எனவும் அந்த உத்தரவில் நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்