செய்திகள்

அமெரிக்காவில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து : 5 பேர் சாவு

அமெரிக்காவில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

நியூயார்க்,

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிளசன்ட் மவுண்ட் நகரில் மலைப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. அப்போது சுற்றுலா பஸ் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியை முந்தி செல்ல முற்பட்டபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. பின்னர் அந்த பஸ் மீது லாரி மோதி கவிழ்ந்தது.

அதனை தொடர்ந்து, பின்னால் வந்து கொண்டிருந்த 2 சரக்கு லாரிகள் மற்றும் ஒரு கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.

இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்