செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில், தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி 2 குழந்தைகள் கொலை: பெண் தற்கொலை முயற்சி

பெங்களூரு அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி 2 குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சர்ஜாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொம்மசந்திராவை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி முனிரத்னம்மா. இந்த தம்பதிக்கு 7 வயதில் சந்தன் என்ற மகனும், 5 வயதில் யுவராணி என்ற மகளும் இருந்தார்கள். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல, நேற்று முன்தினமும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. பின்னர் வீட்டில் இருந்து முனிராஜ் வெளியே புறப்பட்டு சென்று விட்டார்.

SCROLL FOR NEXT