பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சர்ஜாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொம்மசந்திராவை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி முனிரத்னம்மா. இந்த தம்பதிக்கு 7 வயதில் சந்தன் என்ற மகனும், 5 வயதில் யுவராணி என்ற மகளும் இருந்தார்கள். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல, நேற்று முன்தினமும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. பின்னர் வீட்டில் இருந்து முனிராஜ் வெளியே புறப்பட்டு சென்று விட்டார்.