செய்திகள்

கோபி அருகே 2 நாட்களாக எண்ணெய் ஆலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை

கோபி அருகே 2 நாட்களாக எண்ணெய் ஆலைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

தினத்தந்தி

கடத்தூர்,

கோபி அருகே உள்ள காமராஜ் நகர் பகுதியில் ஈரோட்டை சேர்ந்த ஆறுமுகம், சண்முகம் ஆகியோருக்கு சொந்தமான 3 எண்ணெய் ஆலைகள் உள்ளன. இங்கிருந்து எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இந்த எண்ணெய் ஆலைகளுக்கு கடந்த 10-ந் தேதி கோவை மண்டல வருமான வரித்துறை மற்றும் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்தனர்.

பின்னர் அவர்கள் ஆலைகளில் சோதனை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 2-வது நாளாகவும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது ஆலைகளில் இருந்து யாரையும் வெளியில் செல்லவும், வெளியில் இருந்து யாரும் உள்ளே வரவும் அனுமதிக்கவில்லை.

இரவு 10.30 மணி வரை இந்த சோதனை நடந்தது. அதன்பின்னரே அதிகாரிகள் ஆலைகளை விட்டு வெளியே சென்றனர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. கோபி அருகே எண்ணெய் ஆலைகளில் 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து