தேசிய செய்திகள்

காஷ்மீரில் பெய்த பேய் மழையால், 100 ஆடுகள் பலி

காஷ்மீரில் பெய்த பேய் மழையால், 100 ஆடுகள் பலியானது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டெரி அங்கான் காட்டுப்பகுதியில் ஒரு சில நிமிடங்களிலேயே பேய் மழை கொட்டித்தீர்த்தது. இதில் 100 ஆடுகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் மனித உயிரிழப்பு ஏற்படவில்லை.