தேசிய செய்திகள்

தண்ணீருக்காக இரு கிராமங்கள் இடையே மோதல், 12 பேர் காயம், 300 பேர் மீது வழக்குப்பதிவு, வாகனங்கள் எரிப்பு

ஹிசாரில் தண்ணீருக்காக இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் காயம் அடைந்தனர். வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

ஹிசார்,

அரியானா மாநிலம் ஹிசாரில் புதி மங்கல்கான் மற்றும் பீரான்வாலி கிராமங்கள் இடையே தண்ணீர் விவகாரம் தொடர்பாக மோதல் வெடித்துள்ளது. இதில் 12 பேர் காயம் அடைந்து உள்ளனர். 9 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக 300 பேர் வரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பீரான்வாலி கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்க எரியில் இருந்து பொதுத்துறை சார்பில் பம்ப் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது, இதற்கு புதி மங்கல்கான் கிராம மக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது இருதரப்பு இடையே நேரிட்ட வாக்குவாதம் பெரும் மோதலுக்கு வழிவகை செய்தது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்