தேசிய செய்திகள்

கோழி குஞ்சுகள் பக்கத்து வீட்டில் நுழைந்த விவகாரம்; இரு தரப்பினர் மோதலில் 12 பேர் காயம்

கோழி குஞ்சுகள் பக்கத்து வீட்டில் நுழைந்த விவகாரத்தில் இரு தரப்பினர் மோதி கொண்டதில் 12 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் போஜாஹரி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஷேஷாத். இவருக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் மெஹ்ராசுதீன்.

இந்த நிலையில், மெஹ்ராசுதீன் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். அவரது கோழி குஞ்சுகள் ஷேஷாத்தின் வீட்டிற்குள் இரை தேடி சென்று உள்ளது.

இதில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி வன்முறையாக வெடித்தது. இதனை அடுத்து இரு தரப்பினரும் ஆயுதங்கள் மற்றும் கம்புகளை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட 12 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து வேறு எந்த சம்பவமும் நடந்து விடாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நிலைமை கட்டுக்குள் உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை