கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

நொய்டாவில் 14 சீனர்கள் கைது

நொய்டாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக 14 சீனர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

நொய்டா,

டெல்லி அருகே நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பெண் உள்பட 14 சீனர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களது விசா கடந்த 2020-ம் ஆண்டே காலாவதியாகி விட்டது.

எனினும் தொடர்ந்து அவர்கள் சட்ட விரோதமாக தங்கியிருந்தனர். இதை கண்டறிந்த உளவுத்துறையினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நொய்டா போலீசார் நேற்று அவர்கள் 14 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

முன்னதாக கிரேட்டர் நொய்டாவில் தங்கியிருந்த சீனர் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது