தேசிய செய்திகள்

இரு பிரிவினர் மோதலால் 144 தடை உத்தரவு: தெலுங்கானா சம்பவம் குறித்து அமித்ஷா கேட்டறிந்தார்

தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள பைன்சா நகரில் மோட்டார் சைக்கிளில் செல்வது தொடர்பாக 2 பிரிவனர் இடையே மோதல் ஏற்பட்டது.

பின்னர் இது பயங்கர வன்முறையாக மாறியது. ஒருகட்டத்தில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரர், ஒரு பத்திரிகையாளர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தார். இதனால் பதற்றம் நிலவியது. இதனையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பைன்சா நகரில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. மேலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே தெலுங்கானா சம்பவம் குறித்தும், அங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மத்திய இணை மந்திரி கிஷன்ரெட்டியிடம் கேட்டறிந்தார்.

இந்த தகவலை கிஷன்ரெட்டி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னதாக தெலுங்கானா போலீஸ் டி.ஜி.பி. மகேந்தர் ரெட்டியை தொடர்புகொண்ட கிஷன்ரெட்டி, வன்முறையாளர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்