Image Courtesy : @rpomumbai 
தேசிய செய்திகள்

ஏமனில் சிக்கி தவித்த 18 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஏமனின் நிஷ்துன் துறைமுகத்தில் சிக்கியிருந்த மாலுமிகள் 18 பேர் விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உள்நாட்டு போர் நடந்து வரும் ஏமனில் இந்திய மாலுமிகள் 18 பேர் சிக்கி தவிப்பதாக வந்த தகவலையடுத்து, அவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக இந்திய மாலுமிகள் 18 பேரும் நேற்று நாடு திரும்பினர். அவர்கள் விமானம் மூலம் மும்பை வந்து சேர்ந்தனர்.

இது குறித்து மும்பையில் உள்ள பிராந்திய பாஸ்போர்டு அலுவலகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஏமனில் சிக்கி தவித்த 18 இந்திய மாலுமிகள் மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகங்களின் இடைவிடாத முயற்சியால் மீட்கப்பட்டனர். கடந்த சில வாரங்களாக ஏமனின் நிஷ்துன் துறைமுகத்தில் சிக்கியிருந்த மாலுமிகள் 18 பேரும் நேற்று முன்தினம் தலைநகர் ஏடனுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், நேற்று அவர்கள் விமானம் மூலமாக மும்பை வந்தடைந்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்