தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து - 18 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 18 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீரின் பர்மீனில் இருந்து உதம்பூர் மாவட்டத்திற்கு 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மினிபஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. மசோரா அருகே பஸ் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 18 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு உதம்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விபத்தில் படுகாயமடைந்த பர்மீனைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் மேல்சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்