கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் காலி சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஜம்முவை நோக்கி சென்றது. அதிகாலை நேரத்தில் ரம்பன் மாவட்டம் சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில் தெற்கு ஜம்முவை சேர்ந்த டிரைவர் அல்யாஸ் அகமது கட்னா (வயது 40) மற்றும் கிளீனர் சமீர் (26) ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பனிமூட்டம் காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காலி சிலிண்டர்கள் என்பதால் பெரும் விபத்து ஏதும் நடக்கவில்லை.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்