தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் கைதி தப்பியதால் 2 சிறை காவலர்கள் பணியிடை நீக்கம்

உத்தரபிரதேசத்தில் கைதி தப்பியதால் 2 சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில் பிரவீன் பால் என்பவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் டியோரியா ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 2 சிறை காவலர்கள் அவருக்கு பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் பிரவீன் பால், ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து கைதியின் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்ததாக, சிறைக்காவலர்கள் 2 பேரை நேற்று சிறை நிர்வாகம் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்தது. தப்பியோடிய கைதியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்