தேசிய செய்திகள்

100 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து இருவர் உயிரிழப்பு

உத்தரகாண்டில் 100 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

டேராடூன்,

பிர்புர் பகுதியில் ராம்சா ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த மிகவும் பழமையான பாலத்தில் இன்று காலை மினி டிராக்டரும், மோட்டார் பைக்கும் சென்ற போது விபத்து நேரிட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது கட்டப்பட்ட அந்த பாலம் காலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புது பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

SCROLL FOR NEXT