தேசிய செய்திகள்

மாவோயிஸ்டுகள் எனக்கூறி பொதுமக்களிடம் கொள்ளையடித்த 2 போலீசார் கைது

பாஸ்தரில் மாவோயிஸ்டுகள் எனக்கூறி பொதுமக்களிடம் கொள்ளையடித்த 2 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பாஸ்தர் பகுதியில் உள்ள நாராயன்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் போன்று வேடமிட்டு பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் பயணிகளை சூறையாடியதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களில் ஒருவரும் உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தில் தொடர்புடைய மற்றொரு போலீஸ்காரர் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணி நடக்கிறது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொள்கிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...