புதுடெல்லி,
டெல்லியில் 200-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் தங்களுக்கு 2014-ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட பங்களாக்களை இன்னும் காலி செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த எம்.பி.க்களுக்கு டெல்லி லுட்யென்ஸ் பகுதியில் பங்களாக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. மக்களவை கலைக்கப்பட்டு ஒரு மாதத்தில் அவர்கள் அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்பது விதி.
16-வது மக்களவையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மே மாதம் 25-ந் தேதி கலைத்து உத்தரவிட்டார். எனவே, கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் முன்னாள் எம்.பி.க்கள் 200 பேர் அரசு பங்களாக்களை காலி செய்யாததால் புதிய எம்.பி.க்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கித்தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடப்பு மக்களவையில் 260-க்கும் மேற்பட்டோர் புதிய எம்.பி.க்கள் ஆவர். அவர்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்க பெரும் செலவாகும் என்பதால், வெஸ்டர்ன் கோர்ட் பகுதியில் உள்ள தற்காலிக தங்கும் இடங்களிலும், விருந்தினர் மாளிகைகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.