தேசிய செய்திகள்

"ஸ்டாலின் தொடுத்த வழக்கால் ஓபிசி பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு உறுதியானது" - திருச்சி சிவா எம்.பி

ஸ்டாலின் தொடுத்த வழக்கால் ஓபிசி பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு உறுதியானது என்று திருச்சி சிவா எம்.பி மாநிலங்களைவில் கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இது குறித்து மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி கூறியதாவது:-

சுயமரியாதையின் கட்சியாக விளங்கும் திமுக அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஆதரிக்கிறது. நிர்பந்தத்தின் காரணமாகவே மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.

ஸ்டாலின் தொடுத்த வழக்கால் ஓபிசி பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு உறுதியானது. இடஒதுக்கீடு மூலம் ஓபிசி பிரிவினருக்கு 4,000 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும். ஓபிசி பிரிவினருக்கான அதிகபட்ச உச்ச வரம்பு 50% என்பதை நீக்க பரிசீலிக்க வேண்டும்.

2018ல் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவால் 678 ஓபிசி பிரிவினர் பாதிக்கும் சூழல் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளவது பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது