கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் கார் மோதி 3 மாணவர்கள் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தின் தவுகி பகுதியில் நேற்று காலை சில மாணவர்கள் பள்ளி செல்வதற்காக பஸ்சுக்கு காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த மாணவர்கள் மீது மோதியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் உறவினர்கள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு