தேசிய செய்திகள்

இந்தியாவில் 3½ கோடி மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் இதுவரை 3½ கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில், கடந்த 23-ந் தேதிவரை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 3 கோடியே 59 லட்சத்து 2 ஆயிரத்து 137 ஆக அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 10 லட்சம் மக்கள்தொகைக்கு 26 ஆயிரத்து 106 பேர் என்ற விகிதத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துவிட்டது. குணமடைந்தவர்கள் விகிதம் 75 சதவீதமாக உள்ளது. அதே சமயத்தில், கொரோனாவுக்கு பலியானோர் விகிதம் 1.85 சதவீதமாக குறைந்துள்ளது.

கொரோனா அறிகுறி உள்ளவர்களை உரிய நேரத்தில் கண்டறிந்து, பரிசோதனை நடத்தி, சிகிச்சை அளிப்பதுதான், கொரோனா மீட்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு காரணங்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு