தேசிய செய்திகள்

மராட்டியம்: சிறுவன் ஓட்டிய சொகுசு கார் மோதி 3 பேர் படுகாயம்

காரை இளம்பெண்ணின் நண்பனான சிறுவன் ஓட்டியுள்ளான்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தெற்கு மும்பையின் அக்ரிபடா பகுதியை சேர்ந்த தொழிலதிபருக்கு 18 வயதில் பேத்தி உள்ளார்.

இந்நிலையில், அந்த இளம்பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பனான 17 வயது சிறுவனுடன் தொழிலதிபரான தாத்தாவின் பென்ஸ் சொகுசு காரில் சென்றுள்ளனர். காரை இளம்பெண்ணின் நண்பனான சிறுவன் ஓட்டியுள்ளான்.

தெற்கு மும்பையில் டிஎம் மர்க் அருகே கடற்கரை சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் சிறுவன் காரை வேகமாக ஓட்டியுள்ளான்.

அப்போது சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த கார் மீது சிறுவன் ஓட்டிய சொகுசு கார் வேகமாக மோதியது. இதில் விபத்துக்குள்ளான காரில் பயணித்த மூதாட்டி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்னம்பிக்கை அனைத்தையும் சாத்தியமாக்கும்; பிரதமர் மோடி

மனைவியுடன் தகராறு: 12 வயது மகனை குத்திக்கொன்ற தந்தை - அதிர்ச்சி சம்பவம்

டெல்லியில் பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது

மனைவியை குத்திக்கொன்ற வழக்கில் அரசு ஊழியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

"இந்திய அமெரிக்க வர்த்தகம் இனி மென்மேலும் பூத்துக் குலுங்கும்"- உள்துறை மந்திரி அமித்ஷா