தேசிய செய்திகள்

இமாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினத்தந்தி

சிம்லா,

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரவு 10.02 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் கின்னூரில் உள்ள நாகோ அருகே சாங்கோ நிச்லாவில் இருந்ததாக பேரிடர் மேலாண்மை சிறப்பு செயலாளர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார்.

இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 5 கிலோமீட்டர் ஆகும். சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை