தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 3.9 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

மராட்டிய மாநிலத்தில் 3.9 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மும்பை,

மகாராட்டியத்தின் கோலாப்பூர் பகுதியில் இன்று அதிகாலை 2.36 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 3.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை .