தேசிய செய்திகள்

ஒவ்வொரு மாதமும் 4-5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும்; மத்திய ரெயில்வே மந்திரி பேச்சு

வருகிற செப்டம்பர் முதல் ஒவ்வொரு மாதமும் 4-5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி கூறியுள்ளார்.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் 67வது ரெயில்வே விருது வழங்கும் விழா நடந்தது. இதில், மத்திய ரெயில்வே, தொலைதொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி பேசிய மத்திய ரெயில்வே மந்திரி வைஷ்ணவ், வருகிற செப்டம்பர் முதல் ஒவ்வொரு மாதமும் 4-5 வந்தே பாரத் ரெயில்கள் தொடங்கி வைக்கப்பட்டு இயக்கப்படும் என கூறினார்.

அதிவேக புல்லட் ரெயில்களுக்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன என அவர் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில், மத்திய ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகிப் பாட்டீல் தன்வே மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து