தேசிய செய்திகள்

டிராக்டர் மீது லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் உறவினரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இன்று காலை டிராக்டரில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

மொராதாபாத் - சம்பல் நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 12 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.