தேசிய செய்திகள்

2 பேரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி: 4 வாலிபர்கள் கைது

2 பேரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

உப்பள்ளி: தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா ஆனந்த நகர் பகுதியில் சிலர் பொது இடத்தில் நின்று சிகரெட் பிடித்துள்ளனர். அப்போது அந்த வழியாக 2 பேர், அவர்களிடம் பொது இடத்தில் சிகரெட் பிடிக்காதீர்கள் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்தவர்கள், 2 வாலிபர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் 2 பேரையும் குத்தி கொலை செய்ய முயன்றனர்

இதுகுறித்து 2 பேர் கொடுத்த புகாரின் பேரில் பழைய உப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாக அதேப்பகுதியை சேர்ந்த ரபீக் (வயது 23), அல்தாப் (28), அஸ்லாம் (30) மற்றும் முகமது அலி (22) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு