தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் கனமழைக்கு 49 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் கடந்த 2 நாட்களில் பெய்த கனமழைக்கு 49 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதில் கடந்த வியாழகிழமையில் இருந்து இதுவரை 49 பேர் பலியாகி உள்ளனர்.

அவர்களில் சஹாரன்பூரில் அதிக அளவாக 11 பேர் பலியாகி உள்ளனர். இதேபோன்று ஆக்ரா மற்றும் மீரட் ஆகிய நகரங்களில் தலா 6 பேர் பலியாகி உள்ளனர். மெயின்பூரி பகுதியில் 4 பேரும், காஸ்கஞ்ச் பகுதியில் 3 பேரும், பரேலி, பாக்பத் மற்றும் புலந்த்சாஹர் பகுதிகளில் 2 பேரும் பலியாகி உள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் கான்பூர் தேஹத், மதுரா, காஜியாபாத், ஹாபூர், ரேபரேலி, ஜலான், ஜான்பூர், பிரதாப்கார்ஹ், பண்டா, பிரோசாபாத், அமேதி, கான்பூர் மற்றும் முசாபர்நகர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் மழைக்கு பலியாகி உள்ளனர்.

இதனை தொடர்ந்து முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று இடிந்த கட்டிடங்களை அடையாளம் காணும்படியும், அங்கு வசிப்பவர்களை வெளியேறும்படியும் செய்ய அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது