தேசிய செய்திகள்

நவி மும்பையில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மும்பை,

நவி மும்பையில் ஒரு நபர் தனது உறுவினரின் 5 வயது மகளை இனிப்பு கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி பெற்றோருடன் பன்வெல் கிராமத்தில் வசித்து வருகிறார். குற்றம்சாட்டப்பட்ட நபர் நவி மும்பை வாஷி பகுதியில் வசித்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட நபர், சிறுமிக்கு இனிப்பு கொடுப்பதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு குற்றவாளியை வருகிற 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி