தேசிய செய்திகள்

சென்னையில் ஏழுமலையான் கோவில் விரிவாக்கத்திற்கு நிலம் வாங்க திருப்பதி தேவஸ்தான குழுவிடம் ரூ.5.11 கோடி ஒப்படைப்பு..!

சென்னையில் உள்ள ஏழுமலையான் கோவில் விரிவாக்கத்திற்கு நிலம் வாங்க 5 கோடியே 11 லட்சம் ரூபாய் நன்கொடைத் தொகை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினத்தந்தி

திருப்பதி,

சென்னையில் உள்ள ஏழுமலையான் கோவில் விரிவாக்கத்திற்கு நிலம் வாங்க 5 கோடியே 11 லட்சம் ரூபாய் நன்கொடைத் தொகை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை தியாகராய நகரில் உள்ள ஏழுமலையான் கோவில் பணிகளுக்காக இதுவரை எட்டு கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார்கள் உட்பட 9 பேர் 5 கோடியே 11 லட்ச ரூபாய் நன்கொடையை தேவஸ்தானத்தின் சென்னை, பாண்டிச்சேரி பிராந்திய திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழுவிடம் வழங்கினர்.

இதையடுத்து திருப்பதியில் நடைபெற்ற தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில், சென்னை, பாண்டிச்சேரி பிராந்திய திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழு தலைவர் சேகர ரெட்டி தலைமையிலான அறங்காவலர் குழு, 5 கோடியே 11 லட்சம் ரூபாயை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம் ஒப்படைத்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு