தேசிய செய்திகள்

மும்பை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாட்ச்மேன் கைது

மும்பையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாட்ச்மேனை போலீசார் கைதுசெய்தனர்.

தினத்தந்தி

மும்பை,

தெற்கு மும்பையில் உள்ள டோங்ரியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 58 வயதான வாட்ச்மேன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்தபுதன்கிழமை பிற்பகல் 11 வயது சிறுமி டியூஷனுக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுமி தனியாக இருந்ததால், பாதுகாவலர் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

சிறுமியின் தாயார் டோங்ரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு