தேசிய செய்திகள்

ரூ.1.50 லட்சம் கோடியை கடந்த 5ஜி அலைக்கற்றை விற்பனை..!! - 7-வது நாளாக இன்றும் ஏலம்

5ஜி அலைக்கற்றை விற்பனை ரூ.1.50 லட்சம் கோடியை கடந்துள்ளது. தொடர்ந்து 7-வது நாளாக இன்றும் ஏலம் நடைபெறுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அதிவேக இணையதள வசதியை கொடுக்கும் 5ஜி அலைக்கற்றை விற்பனைக்கான ஏலம் கடந்த 26-ந் தேதி முதல் நடந்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் அதானி குழுமம் என 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கெடுத்து தொடர்ந்து அலைக்கற்றையை சொந்தமாக்கி வருகின்றன.

இதில் 6-வது நாளாக நேற்றும் 7 சுற்று ஏலம் நடந்தது. இதில் ரூ.163 கோடிக்கு அலைவரிசை ஏலம் போனது. இதன் மூலம் கடந்த 6 நாட்களாக நடந்த 5ஜி ஏலத்தில் ரூ.1,50,130 கோடிக்கு அலைக்கற்றை விற்பனை நடந்து உள்ளது.

இந்த ஏலம் 7-வது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) நீடிக்கிறது. உத்தரபிரதேசத்தின் கிழக்கு வட்டத்தில் ரேடியோ அலைகளுக்கான தேவை அதிகரித்ததை தொடர்ந்து அலைக்கற்றை ஏலம் 7-வது நாளுக்கு தள்ளிப்போயிருப்பதாக தொலைத்தொடர்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது