தேசிய செய்திகள்

அசாமில் அல்-கொய்தா பயங்கரவாதிகள் 6 பேர் கைது

அசாமில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்புடைய 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

அசாம் மாநிலம் பார்பெட்டா மாவட்டத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவர் உள்பட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கடந்த மாதம் 4-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பார்பெட்டா மாவட்டத்தில் மேலும் பல அல்-கொய்தா பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் பார்பெட்டா மாவட்டம் ஹவுலி நகரில் அல்-கொய்தா பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று இரவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்புடைய 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 6 பேரும் பார்பெட்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது