தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா சிகிச்சை பெறும் 62% பேர் தமிழகம் உள்பட 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள்; மத்திய அரசு

நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவோரில் 62% பேர் தமிழகம் உள்பட 5 மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் பற்றி மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் பேசும்பொழுது, இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 29.7 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளது. இது சிகிச்சை பெறுவோரை விட 3.5 மடங்கு அதிகம்.

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 11 லட்சத்திற்கும் கூடுதலான கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நேற்று ஒரே நாளில் 68,584 பேர் என்ற இதுவரை இல்லாத வகையில் அதிகளவிலானோர் குணமடைந்து சென்றுள்ளனர். இதுவரை 4.5 கோடிக்கும் கூடுதலான கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

நாட்டில் தமிழகம், உத்தர பிரதேசம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் மற்றும் மராட்டியம் ஆகிய 5 மாநிலங்கள் கொரோனா பாதிப்புகளுக்காக சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கையில் 62% கொண்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு