தேசிய செய்திகள்

சத்தீஸ்கர்: சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து - 7 பேர் பலி

சத்தீஸ்கரில் சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராய்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரி அருகே மல்கான் கிராமத்தில் சுண்ணாம்பு சுரங்கம் தோண்டும் பணியின் போது மண் சரிந்தது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்த 12 தொழிலாளர்கள் மண்ணிற்குள் புதைந்தனர். இந்த மண் சரிவில் சிக்கி பெண்கள் உள்பட 7 தொழிலாளர்கள் பலியானார்கள்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் 7 பேரின் உடலை மீட்டனர். மேலும் மண்சரிவில் சிக்கி உள்ள 5 பேரை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்