தேசிய செய்திகள்

இலங்கைக்கு சென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 5 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை : உறவினர்கள் வேதனை

இலங்கைக்கு சென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 5 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியர்கள் உள்பட 290 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த குண்டு வெடிப்பில், இந்தியர்கள் 6 பேர் பலியானதாக தற்போது வரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூருவிலிருந்து இலங்கைக்கு சென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 5 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்