ஐதராபாத்,
தெலுங்கானாவில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணம், புதிய வகை போன்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்களில் முகமது அப்சார் மற்றும் மிர்சா அஸ்வக் பெய்க் ஆகிய 2 பேரும் சேர்ந்து, ஐதராபாத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளரான அசாதுதீன் அகமது என்பவர் வீட்டில் இருந்து ரூ.2.5 கோடி பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்களுக்கு உதவியாக முகமது அமீர், இம்ரான் மற்றும் ரெஹ்மான் ஆகிய 3 பேரும் செயல்பட்டு உள்ளனர்.
இதேபோன்று மற்றொரு கொள்ளை சம்பவத்தில் பையதுல்லா கான் மற்றும் சையது மஹபூப் அலி என்ற 2 பேரும் சேர்ந்து ஈடுபட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புடைய 57 புதிய வகை ஸ்மார்ட் போன்கள், இரு சக்கர வாகனம் மற்றும் அவர்களது 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், மற்றொரு கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ், வாசிம் அக்ரம் மற்றும் சிராஜ் கான் ஆகியோரிடம் இருந்து 12 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.