தேசிய செய்திகள்

85% ராணுவ தளவாட பொருட்கள் இந்திய நிறுவனங்களிடம் கொள்முதல்; ராணுவ தளபதி பேச்சு

இந்திய ராணுவத்துக்கு தேவையான எந்த பொருளானாலும் 85% இந்திய நிறுவனங்களிடம் இருந்தே வாங்கப்படுகின்றன என ராணுவ தளபதி கூறியுள்ளார்.

தினத்தந்தி

ஆமதாபாத்,

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே இன்று கலந்து கொண்டார். அவர் பேசும்போது, ஒரு சிக்கலை அணுகும்போது 4 விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். கண்டுபிடித்தல், வரையறுத்தல், மேம்படுத்துதல் மற்றும் விடுபடுதல் ஆகியவை தேவை.

சிக்கலுக்கான அடிப்படையை கண்டுபிடித்து, அதனை தீர்ப்பதற்கான வரையறையை செய்து, முன்னேற்றம் கண்டு பின்பு அதில் இருந்து விடுபட வேண்டும் என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, இந்திய ராணுவத்துக்கு தேவையான எந்த தளவாடங்களானாலும் 85% இந்திய நிறுவனங்களிடம் இருந்தே வாங்கப்படுகின்றன. இந்திய பாதுகாப்பு தொழிலின் ஒட்டுமொத்த சூழல் அமைப்பையும் மாற்றுவதற்கு சென்னை மற்றும் லக்னோவில் உள்ள பாதுகாப்பு தளவாட மையங்கள் உதவி புரிந்துள்ளன என அவர் பேசியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு