தேசிய செய்திகள்

செவிலியரை கத்தியால் குத்திய கொரோனா நோயாளி

மும்பையில் செவிலியரை கத்தியால் குத்தியதால் கொரோனா நோயாளி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் தெற்கு மும்பை பகுதியில் உள்ள மலபார் மலை காவல் எல்லைக்குள்பட்ட மருத்துவமனையில் ஒன்றில் கொரோனா நோயாளி ஒருவர் செவிலியரை கத்தியால் குத்தியுள்ளார்.

இதையடுத்து அந்த நோயாளி மீது 4 பிரிவுகளின் கீழ் மலபார் மலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.