தேசிய செய்திகள்

சம்பள உயர்வு கேட்டு சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மேலாளர்...!

சம்பள உயர்வு கேட்டு சென்ற இளம்பெண்ணை உணவில் போதை மருந்து கொடுத்து நிறுவன மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

கவுகாத்தி,

அரியானா மாநிலம், குருகிராமில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது சம்பள உயர்வு விவகாரம் தொடர்பாக தனது நிறுவன மேலாளர் அழைத்ததன் பெயரில் ஒரு மாலுக்கு சென்றுள்ளார்.

அந்த மாலுக்கு வெளியே இருவரும் பேசுகையில் அந்த பெண்ணிற்கு வழங்கப்பட்ட உணவில் மேலாளர் , போதை மருந்து கலந்து கொடுத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த பெண்ணை மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் , மேலும் அந்த பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது நிறுவன மேலாளர் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து