தேசிய செய்திகள்

முண்டகோடு அருகே கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை

முண்டகோடு அருகே கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பபட்டார்.

உத்தரகன்னடா-

உத்தரகன்னடா மாவட்டம் முண்டகோடு தாலுகாவில் திபெத்திய முகாம் உள்ளது. இந்த முகாமில் லோக்சங் (வயது35) மற்றும் சோடாக் (50) ஆகியோர் தங்கி இருந்தனர். சோடாக் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த சோடாக் அருகில் கிடந்த கத்தியை எடுத்து லோக்சங்கை குத்தியுள்ளார். லோக்சங் மற்றொரு கத்தியை எடுத்த சோடாக்கை குத்தியுள்ளார். இதில் லோக்சங் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த சோடாக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த முண்டகோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் லோக்சங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முண்டகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்