தேசிய செய்திகள்

பிரதமர் மற்றும் முதல்வருக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்டவர்கள் கைது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

உத்தரப்பிரதேசம்

கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி பிரகாஷ் வர்மா மற்றும் ரமேஷ் யாதவ் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிஜேபி தலைவர்கள் குறித்து அவதூறாகப் பேசி டுவிட்டர், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரகாஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது மந்து ராம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பான்ஸ்டி சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் இன்று கைது செய்துள்ளனர்.