தேசிய செய்திகள்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை - மத்திய மந்திரி நிதின்கட்காரி தகவல்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய மந்திரி நிதின்கட்காரி தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் புதிய வலைத்தளத்தை மத்திய மந்திரி நிதின்கட்காரி தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ அமல்படுத்த அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த சட்டத்தில் உள்ள அபராதம், லைசென்ஸ், பதிவு, தேசிய போக்குவரத்து கொள்கை போன்ற 63 பிரிவுகளுக்கு புதிய விதிகளை நிர்மானிக்க தேவையிருக்காது. அவைகள் சட்ட அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்ததும் அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்து அமல்படுத்தப்படும்.

இவை தவிர மற்ற சட்டப்பிரிவுகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த நடவடிக்கைகள் முடிவடைந்ததும் விதிகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் ஊழல் இல்லாத, பாதுகாப்பான சாலை போக்குவரத்தை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...