கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ரூ.200 கோடி மோசடி வழக்கு: பாகுபலி பட நடிகையிடம் 2வது நாளாக விசாரணை

பாகுபலி பட நடிகை நோரா பதேஹியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று 2வது நாளாக விசாரணை நடத்தினர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாகுபலி பட நடிகை நோரா பதேஹியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பணமோசடி வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவிந்தர் சிங்கை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி, சிவிந்தர் சிங் மனைவி ஆதிதி சிங்கிடம் சுகேஷ் சந்திரசேகர் சுமார் ரூ.200 கோடியை மோசடி செய்ததாக ஆதிதி சிங் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த சூழலில் தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி ரூ.200 கோடி பறித்ததாக சுகேஷ் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக நடிகை நோரா பதேஹியிடம் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்