தேசிய செய்திகள்

நடிகர் பிருத்விராஜ் வீட்டில் திடீர் ரெய்டு - ஆவணங்களை அள்ளிச்சென்ற அதிகாரிகள்

அதிகாரிகள், சில ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

கோழிக்கோடு,

கேரளாவில் நடிகர் பிருத்விராஜ், தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், லிஸ்டின் ஸ்டீபன், ஆண்டோ ஜோசப் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த வருமான வரித்துறையினர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சோதனை நடத்தினர். இந்த வருமான வரி சோதனை குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சோதனை தொடர்பாக ஊடகங்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள் மறுத்து விட்ட நிலையில், சில ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி