தேசிய செய்திகள்

சூரியனை ஆய்வு செய்ய இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் சுற்றுப்பாதை உயர்வு வெற்றி

சூரியனை ஆய்வு செய்ய இருக்கும் ஆதித்யா- எல்1 விண்கலம் சுற்றுப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற விண்கலம், கடந்த 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லாக்ராஞ்சியன் புள்ளி-1யை சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும்.

அதற்கு முன்னதாக ஆதித்யா எல்-1 விண்கலம் 16 நாட்கள் பூமியைச் சுற்றி வரும் போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்படுகிறது. அந்தவகையில் பூமியின் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான முதல் கட்டப்பணி கடந்த 3-ந்தேதி நடந்தது. அதன்படி, சுற்றுப்பாதை பூமியில் இருந்து குறைந்த பட்சம் 245 கிலோ மீட்டரும், அதிகபட்சமாக 22 ஆயிரத்து 459 கிலோ மீட்டர் என்ற அளவில் சுற்றி வந்தது.

தொடர்ந்து அடுத்து 2-ம் கட்டமாக கடந்த 4-ந்தேதி அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் சுற்றுப்பாதை உயர்த்தும் பணி நடந்தது. தொடர்ந்து 3-வது கட்டமாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி கடந்த 10-ம் தேதி நடந்தது. தொடர்ந்து 4- வது முறையாக சுற்றுவட்ட பாதை உயர்த்தும் பனி இன்று வெற்றிகரமாக நடந்தது. பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இதற்கான சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி நடந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது