தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: இடைத்தரகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் இடைத்தரகரான கிறிஸ்டியன் மைக்கேலின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஜனவரி 5ம் தேதியிலிருந்து அவர் விசாரணைக் காவலில் எடுக்கப்பட்டார். இவர் அமலாக்கத்துறை வழக்கு தொடர்பாகவும், சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு தொடர்பாகவும் விசாரணைக் காவலில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

இந்நிலையில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் கிறிஸ்டியன் மைக்கேலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். ஜாமீன் அளிப்பதற்கான போதிய அடிப்படைகள் இல்லை என்று மனுவை தள்ளுபடி செய்வதாக அவர் தன் உத்தரவில் தெரிவித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு