தேசிய செய்திகள்

மத்திய அரசு டாடா சன்ஸ் இடையே ஏர் இந்தியா கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்து

ஏர் இந்தியா பங்குகளை டாடா நிறுவனம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

தினத்தந்தி

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை டாடா நிறுவனத்துக்கு விற்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் கடிதத்தை மத்திய அரசு கடந்த 11-ந்தேதி டாடா குழுமத்திடம் அளித்தது. இதன் அடுத்தகட்டமாக, ஏர் இந்தியா பங்குகளை டாடா நிறுவனம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இதில் மத்திய அரசும், டாடா சன்ஸ் நிறுவனமும் கையெழுத்திட்டதாக முதலீட்டு துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை