ரியாத்,
நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அவரை ரியாத் நகரில் உள்ள விமான நிலையத்தில் சவுதி அரேபியாவுக்கான தூதர் டாக்டர் சுஹேல் அஜாஸ் கான், சவுதி அரேபியாவின் அரசியல் விவகார துணை மந்திரி மற்றும் தூதரான டாக்டர் சாத் அல்-சாதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சிறப்பான முறையில் வரவேற்றனர்.
கடந்த ஜனவரி 28-ந்தேதி சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு பணிக்குழு சார்பில் கூட்டம் நடந்தது. அப்போது, இந்தியாவில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் டெல்லி செங்கோட்டை பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றுக்கு சவுதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.