தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பண்ணையில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு

கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள பண்ணையில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஹாசன்,

கர்நாடகாவின் சில பகுதிகளில் குறைவான மழைப்பொழிவு மற்றும் உரங்களின் விலை உயர்வால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெங்களூரில் தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சிலர் பண்ணையில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோனி சோமனஹள்ளி கிராமத்தில் உள்ள பண்ணையில் 50-60 பைகளுடன் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர், ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளிகளை திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த நிலையில் பண்ணைக்கு வந்த விவசாயி தரணி, தக்காளி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் ஹலேபீடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 379-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து