பெங்களூரு,
உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் தங்கினார். பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு பா.ஜனதா முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா சுமார் 2 மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் நீட்டிக்க அனுமதிப்பது குறித்தும், ஆட்சி நிர்வாகத்தில் எடியூரப்பா குடும்ப உறுப்பினர்களின் தலையீட்டை தடுப்பது குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. முதல்-மந்திரி எடியூரப்பாவை தவிர்த்து இந்த கூட்டம் நடைபெற்றது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.